மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை காரணமாக 15900 குடும்பங்களை சேர்ந்த 49123பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56 இடைத்தங்கள் முகாம்களில் 2558 குடும்பங்களை சேர்ந்த 7241பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக பெருமளவான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதன்போது வீடுகளில் வெள்ளம் புகுந்ததன் காரணமாக மக்கள் பாதுகாக்காப்பாக வெளியேற்றப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெருமளவான பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதன் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் இடைத்தங்கல் முகாம்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சதாகரன் உட்பட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.
இதன்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் மற்றும் சமைத்த உணவுகள் வழங்கல் குறித்து கேட்டறிந்துகொண்டார்.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர்,தற்போது வெள்ள நீர் வழிந்தோடிவருவதன் காரணமாக மாவட்டம் இயல்புநிலைக்கு திரும்பிவருவதாக தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அவற்றில் 11890 குடும்பங்களைச் சேர்ந்த 37541 பேர் நண்பர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கயியுள்ளனர். தற்போது வரையில் 56 பொதுஇடங்களில் 2558 குடும்பங்களைச் சேர்ந்த 7241 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 11முகாம் இருந்த நிலையில் ஒரு முகாம் மூடப்பட்டு வீடுகளுக்கு மக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு உயிராபத்தும் ஏற்படவில்லை.முப்படையினரும் இணைந்துசெயற்பட்டுவருகின்றனர்.
அனைத்து பிரதேச செயலகத்திலும் இரண்டு இயந்திரப்படகு சேவைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.அவற்றில் சில இடங்களில் இயந்திரப்படகுகளின் இலுவை போதாமையினால் கடற்படையினர் உதவி வருகின்றனர்.
அதேபோன்று மண்டூர் பகுதியில் விமானப்படையினர் அழைக்கப்பட்டு உலங்குவானூர்தி ஊடாக பலர் மீட்கப்பட்டனர்.அனைத்து பகுதிகளிலும் மீட்பு பணிகள் முப்படையினர் மூலம் முன்னெடுக்கப்பட்டுவந்தது.
வுhழைச்சேனைப் பிரதேசத்திலே மீன்பிடிக்கச் சென்றுள்ளதாக கருதப்படும் 3 பேரை மீட்கவேண்டியுள்ளதாக கோரப்பட்டுள்ளது. அதற்காக எமது உத்தியோகஸ்த்தர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் சமைத்த உணவு வழங்கப்பட்டுடு வருகின்றதாகவும், உதவுத் தேவை தவிர்ந்த ஏனைய பொருட்களையும் வழங்குவதற்கு அரச சார்பற்ற அமைப்புக்கள் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.