மட்டக்களப்பு தாழங்குடா புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தின் வருடாந்த திருவிழா

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு
 தாழங்குடா புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தின் வருடாந்த திருவிழா 26.06.2016 கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழாவில் நேற்று மாலை  புனிதரின்  திருச்சொரூப பவனியும் தொடர்ந்து  நற்கருணை ஆராதனையும்  நடைபெற்றது.

ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்று விசேட திருப்பலியுடன் புதுநன்மை ,உறுதிப்பூசுதல்  ஆகிய  அருள் அடையாளங்கள்  பங்கு மாணவர்களுக்கு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் வழங்கப்பட்டது

ஆலய வருடாந்த திருவிழா  திருப்பலியை  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையில் பங்குத்தந்தை ரெட்னகுமார்  அடிகளார் இணைந்து ஒப்புகொடுத்தனர்


ஆலய  திருவிழா  திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும்   
கொடியிறக்கும் நிகழ்வு ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றதுடன் திருச்சொரூப ஆசிர்வாதமும் இடம்பெற்றது .

இந்த திருவிழா திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்து சிறப்பித்தனர்