(லியோன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறாவது கண்ணகி கலை இலக்கிய விழா
மட்டக்களப்பு மண்முனை மேற்கு கன்னன்குடா மகா வித்தியாலத்தில் ஜூன் 25 ஆம் 26ஆம் திகதிகளில் இடம்பெற்றது .
இரண்டாம் நாள் நிகழ்வாக காலை கண்ணகி வழக்குரை காதையின் வீரக்
கதாபாத்திரங்கள் தொடர்பாக கண்ணகி கலை இலக்கியக்கூடல் காப்பாளர் எஸ் . மௌனகுரு தலைமையில் காலை ஆய்வரங்கும்
அதனை தொடர்ந்து ஆய்வாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது .
கலை அரங்கும் நிறைவு விழாவும் கண்ணகி கலை இலக்கிய நிறைவு நிகழ்வுகளும்
,கலை கலாசார ,வரலாற்று பதிப்பு நூல்கள் விற்பனையும் கண்காட்சி நிகழ்வும் ,
இலக்கியக்கூடல் செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி கே . துரைராசசிங்கம் தலைமையில் நேற்று
மாலை அமர்வுகள் இடம்பெற்றது .
இடம்பெற்ற ஆறாவது கண்ணகி கலை இலக்கிய விழாவில் மட்டக்களப்பு
மாவட்டத்தின் கலை இலக்கிய வாதிகள்
,இலக்கிய ஆய்வாளர்கள் , விரிவுரையாளர்கள் ,
கல்விமான்கள்,மாவட்ட நீதிபதி
,சட்டத்தரணிகள் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் , கண்ணகி கலை இலக்கியக் கூடல்
உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்