இன்றைய தினம் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பதற்கான சிபார்சினை தேசிய கொவிட் செயலணிக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மாவட்ட அரசாங்க அதிபர் இதனை தெரிவித்தார்.
சுகாதார துறையின் அறிவுறுத்தல்கள்,பயணக்கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிப்பதன் மூலமே இந்த தொற்றினை கட்டுப்படுத்தமுடியும் எனவும் இதற்க பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் எனவும் அரசாங்க அதிபர் இதன்போது வேண்டுகோள்விடுத்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு பத்தாயிரம் மற்றும் ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.