மட்டக்களப்பு மாவட்டத்தில் காநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை காலநிலை மாற்றத்தினால் பனமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.

இன்று காலை தொடர்ச்சியாக இந்த பணிமூட்டத்தினை காணக்கூடியதாகவிருந்தது.

இன்று அதிகாலையில் இருந்து போக்குவரத்து செய்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன் வாகனத்தின் முன் விளக்குகளை எரியவிட்டே பயணங்களை தொடர்ந்தன.

இந்த பனிமூட்டத்தினால் மட்டக்களப்பு வாவி முழுமையாக மூடப்பட்ட நிலையில் இருந்ததையும் காணமுடிந்தது.

நீண்டகாலத்திற்கு பின்னர் இவ்வாறானதொரு நிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.