மட்டக்களப்பில் பாரிய விபத்து


மட்டக்களப்பு –வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று அதிகாலை இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற பாரிய விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மரம் ஏற்றுசென்றுகொண்டிருந்த லொறியும் பொருட்கள் ஏற்றிவந்துகொண்டிருந்த கன்டைனர் லொறியும் நேருக்கு நேர் மோதி மின்சார தூணில் மோதியுள்ளது.

இதன்போது இரண்டு லொறியும் பாரிய சேதமடைந்துள்ளபோதிலும் இரண்டு லொறியிலும் பயணித்தவர்களுக்கு உயிர் சேதம் ஏற்படவில்லை.இதன்போது இரண்டு பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் பல பகுதிகளுக்கான மின்சாரம் வழமை நிலைமைக்கு திரும்பியுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புகைமூட்டத்துடன் கூடிய பனி காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.