விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவருக்கு முகநூல் ஊடாக பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்கள் கைது


விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு முகநூல் ஊடாக பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

இன்று மாலை சித்தாண்டி,செங்கலடி,வந்தாறுமுலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 04பேர் ஏறாவூர் பொலிஸாரினால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் அணியை சேர்ந்த முக்கிய உறுப்பினர் உட்பட நான்கு பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தற்போது ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் குறித்த நபர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.