நேற்று காலை (09.06.2026) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி நகரைச்சேர்ந்த சிவகுருநாதன் சாரங்கன் என்ற 23 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தருமபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவமானது முறையற்ற மின் இணைப்பு காரணமாகவே குறித்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
