அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி, இஸ்மாயில் புரம் பகுதியில் வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும் நபரினால் சிறுமி ஒருவர் தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 26.09.2024 அன்று வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 60 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு நேற்று(29) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.