மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 31 வயதுடைய சந்திவெளி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் செங்கலடி பகுதியில் இருந்து சந்திவெளி நோக்கி சென்ற வேளையே விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கில் உழவு இயந்திரம் ஒன்றில் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இ உழவுஇயந்திர சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று மாலை 4 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்இ உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.