மட்டக்களப்பு நகருக்குள் வரும் சுற்றுலாப்பிரயாணிகள் மற்றும் நகரினை அழகுப்படுத்தும் வகையில் நகரின் நுழைவாயிலில் வரவேற்பு பலகை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகர ரோட்டறிக்கழகம் மற்றும் சர்வதேச றோட்டறிக்கழகம் இணைந்து இந்த மட்டக்களப்பினை அடையாளப்படுத்தும் வரவேற்பு பலகையினை அமைத்து திறந்துவைத்துள்ளது.
இது தொடர்பான நிகழ்வு இன்று மட்டக்களப்பு நகர ரோட்டறிக்கழகத்தின் தலைவர் லயன் அ.செல்வராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு நகர ரோட்டறிக்கழக உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த வரவேற்பு பலகையானது இரவு வேளைகளில் வாகனங்களில் வருவோர் அடையாளம் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.