கிழக்கு மாகாணத்தின் ஆலயங்களின் வரலாற்றில் பெண் ஒருவர் செயலாளராகயிருந்து நிகழ்வொன்றுக்கு தலைமைதாங்கி நடாத்திய நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
ஆலயத்தின் செயலாளர் செல்வி தயாளகௌரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆலயத்தின் பூசகர் மற்றும் ஆலயத்தின் தலைவர் மற்றும் முன்னாள் நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.
வரலாற்றுசிறப்புமிக்க இந்த ஆலயத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல்கள் அமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது ஊடகவியலாளரும் வானொலிக்கலைஞருமான விஸ்வநாதன் பத்மஸ்ரீ மற்றும் ஆலயத்திற்கு சிறப்புசேர்ந்த முன்னாள் தலைவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.