அரிசி வழங்குவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 600மில்லியன் ஒதுக்கீடு -இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தகவல்

குறைந்த வருமானம்பெறுவோருக்க அரிசிவழங்கம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 600மில்லியன் ரூபாவினை ஜனாதிபதி ஒதுக்கீடுசெய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  எண்ணக்கருவில்  நாட்டிலுள்ள வருமானம் குறைந்த மக்களுக்கு இலவச அரிசு வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஸினி சிறிக்காந்த், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன்,உதவி பிரதேச செயலாளா திருமதி சுபாகரன்,இராஜாங்க அமைச்சரின் இணைப்புச்செயலாளர் ரொஸ்மன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் முதல் கட்டமாக 20ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்படவுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் 156000குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.