தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு கலாச்சார விளையாட்டு விழா


க.ருத்திரன்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு கலாச்சார விளையாட்டு விழா இன்று நடைபெற்றது.

இதனை இலங்கை தேசிய கிறிஸ்;தவ மன்றம் பல்சமய சிறுவர் விளையாட்டு கழகம் யூனியன் கொலனி வாழைச்சேனையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது சர்வமத குருமார்களின் இறை ஆசியுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம்,தேசிக்காய் ஓட்டம்,யானைக்கு கண் வைத்தல்,முட்டி உடைத்தல் என பல்வேறு சிறுவர் கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.நிகழ்வில் அதிதிகளாக பாடசாலை அதிபர் இ.விஜயகரன் உட்பட சர்வமத குருமார்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.