நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களை இணைப்பதற்காக நடாத்தப்பட்ட போட்டி பரீட்சையின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நேர்முக தேர்வு மார்ச் மாதம் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் நாரஹேன்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ தலைமையகத்தின் உள்நாட்டலுவல்கள் பிரிவில் நேர்முகப் பரீட்சை நடத்தப்படும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய தகைமைகளைப் பெற்று இதுவரை அழைப்புக் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்கள் றறற.அழாய.பழஎ.டம என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்திலிருந்து மேலதிக தகவல்களைப்பெற்றுக்கொள்ள முடியும்.
நேர்முகதேர்வுக்கு கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் குறித்து இணையத்தளத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.