இன்றைய தினம் சர்வதேச நீர்தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியுடனான காலநிலை நீங்கப்பெற்று கடும் மழைபெய்துவருகின்றது.
கடந்த சில நாட்களாக கடுமையான வறட்சியுடனான காலநிலை நிலவியதன் காரணமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மற்றும் தோட்ட செய்கையாளர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவந்தனர்.
இந்த நிலையில் வறட்சியான காலநிலை நீங்கி நேற்று முதல் பரவலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைபெய்துவருவதன் காரணமாக விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.