மட்டக்களப்பு - புலையவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி


கரடியனாறு - புலையவெளி பிரதான வீதி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் செங்கலடி கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த விபத்தில் 54 வயதுடைய  குடும்பஸ்தர் ஒருவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

கரடியனாறு பகுதியில் இருந்து செங்கலடி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றின் மீது வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன்  மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன். திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடாத்தியதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.