மட்டக்களப்பு- மாங்கேணி கடற்கரையோரம் 18 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்பு!!


காயங்கேணி- மாங்கேணி கடற்கரையோரம் இளைஞன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி மத்தி மாங்கேணி கடற்கரையோரம் நேற்று மாலை (20) இளைஞன் ஒருவன் உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணத்துக்கான காரணம் பற்றி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.