நாளாந்த மின் துண்டிப்பு காலத்தை 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுமாக அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
இதற்கமைய, இன்றைய தினமும் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
