இராம கிருஷ்ணா கல்லூரியில் 37 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு -கலைப்பிரிவில் மாணவி மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலை


வி.சுகிர்தகுமார் 

வெளியான 2021.க.பொ.த. உயர்தரப்பெறுபேறுகளின் படி கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரியில் ( தேசிய பாடசாலை). 37 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட்டதுடன்  வலயத்தில் முதல்  நிலையினை பிடித்துக்கொண்டது.

தெரிவான மாணவர்களில் கலைப்பிரிவில் ல.பிரேம்சனா 3 ஏ சித்தியினை பெற்று  மாவட்டத்தில் முதல் நிலையினையும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் .மு.வைஷாலி 3 ஏ சித்தியினை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலையினை பெற்று மருத்துவ துறைக்கும் தெரிவாகியுள்ளார் என அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

பரீட்சை பெறுபேறுகளின் படி திருக்கோவில் வலயத்தில் இராம கிருஷ்ணா கல்லூரியில் ( தேசிய பாடசாலை).
 தொடர்ந்தும் முன்னணியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படிபல்கலைக் கழகம் செல்லவுள்ள துறை ரீதியான மாணவர்களின் எண்ணிக்கையாவன விஞ்ஞானப் பிரிவில் 09 மாணவர்களும் வர்த்தகப் பிரிவில் 07 மாணவர்களும்  தொழில்நுட்ப பிரிவில் 04 மாணவர்களும்
கலைப் பிரிவில் 17 மாணவர்களும் என 37 மாணவர்கள் தெரிவாகி பல்கலைக்கழகம் செல்ல உறுதியாகியுள்ளது.

எனினும் காத்திருப்புப் பபட்டியல் மூலம் மேலும் பல மாணவர்கள் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

துறை ரீதியாக உயர்பெறுபேறு பெற்ற மாணவர்களில் வர்த்தகத் துறையில் கல்வி கற்ற எஸ்.நோஜன், .சு.இனிதர் ஆகிய இருவரும் 3ஏ சித்தி  பெற்றுள்ளனர்.
தொழில் நுட்ப துறையில் சித்தியடைந்த 4 மாணவர்களில் சி..பிரவிண்காந்த் ABC பெற்றுள்ளார்.