புதிய நிதியமைச்சராகின்றார் சாணக்கியன் எம்.பி.?


மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை நிதியமைச்சராக பிரகடனப்படுத்தி கட்டப்பட்டுள்ள பதாகை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துவருகின்றது.

நேற்று இரவு மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணி என்ற பெயரில் புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள கௌரவ இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு வாழ்த்துகள் என்று குறித்த பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பதாகை முகப்புத்தகத்தில் வாசகர் மத்தியில் கடும் பிரபல்யமடைந்துவருகின்றது.