மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஒரு வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் உட்பட 10 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளதுடன் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன். இன்று திங்கட்கிழமை (23) ஊடகங்களுக்;கு தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், செங்கலடி, ஏறாவூர், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட 3 பேரும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் உட்பட 10 பேரும் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளனர்
அதேவேளை களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 53 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 52 பேருக்கும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேருக்கும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கும்,
பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேரும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேரும் உட்பட 250 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது.
எனவே நாளாந்தம் கொரோனா தொற்றாளர் வீதம் அதிகரித்துச் செல்வதுடன் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். தொடர்ந்து சுகாதார வழிமுறைகளைப் பேணி நடப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என அவர் தெரிவித்தார்.