கோவில்போரதீவில் மாபெரும் சிரமதான பணிகள் முன்னெடுப்பு


மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில்போரதீவில் மாபெரும் சிரமதான பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
போரதீவுபற்று பிரதேச தவிசாளர் வி.மதிமேனன் அவர்களின் திட்டமிடலுடன்,  லண்டனை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளர் மார்க்கண்டு நேசராசா அவர்களின் நேரடி பங்களிப்புடன் போரதீவு பற்று பிரதேச சபை உறுப்பினர் மகேஸ்பரம் கோபிநாத் அவர்களின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
பொறுகாமம் தொடக்கம் கோவில் போரதீவு வரையிலான வீதியின் இரு மருங்கிலும் மற்றும் ஸ்ரீ மீனாட்சிக்கட்டு பிள்ளையார் ஆலய வெளிப்புற எல்லைப்புற குளத்தின் இரு மருங்கிலுமாக இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது
இந்த சிரமதான பணியில் கோவில் போரதீவு கிராம பொதுமக்கள்,கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் மற்றும் ஆலய அறங்காவலர் சபையினர்,|விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் கமநல அமைப்பின் நிருவாகிகள், விவசாயிகள், போரதீவு பற்று பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது வீதிகளின் இருமருங்கிலும் இருந்த குப்பைகள் மற்றும் பற்றைக்காடுகள் அகற்றப்பட்டதுடன் பழுதடைந்த குளக்கட்டுகளும் திருத்தியமைக்கப்பட்டதுடன் வீதியினை அழகுபடுத்தும் வேலைகளும் முன்னெடுக்கப்பட்டன.