நேற்று மாலை பாரதி வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஓருவரின் தங்கமாலையை துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் அறுத்துச்சென்றுள்ளார்.
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் சிசிரிவி காட்சிகளைக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை அடையாளம் கண்டவர்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.