மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடந்து பெய்துவரும் மழை – பாடசாலைகளும் வெள்ளத்தில் மூழ்கியது


மட்;டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன.

பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி ஐயங்கேணி கிராமம் முற்றாக நீரில் மூழிகியுள்ளது. 

ஐயங்கேணி, விபுலானந்தபுரம், பாரதிபுரம், ரெட்ணாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 80 க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டடுள்ளனர். 

குறித்த கிராமங்களின் வீதிகள் முற்றாக நீரில் மூழ்கியமையினால் மக்கள் வீதிப்போக்குவரத்திற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். வீடுகளினுளும் வெள்ள நீர் சென்றிருப்பதையும் அவதானிக்ககூடியதாகவிருந்தது.

இதேபோன்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி கிராம மக்களும் வெள்ள நீரினால் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். 

மயிலம்பாவெளி – விநாயகர் புரம் மற்றும் விபுலானந்தபுரம் பகுதிகளைச் சேர்ந்த  சுமார் 40 க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டடுள்ளனர். 

குறித்த கிராமங்களின் வீதிகள் வெள்ளநீரில் மூழிகியமையினால் மக்கள் வீதிப்போக்குவரத்திற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். வீடுகளினுளும் வெள்ள நீர் சென்றிருப்பதையும் அவதானிக்ககூடியதாகவிருந்தது.

மட்டக்களப்பு நகரில் பெய்த கடும் மழை காரணமாக சில பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையும் காணமுடிந்தது.

பாடசாலை வெள்ளத்தில் மூழ்கியதனால் மாணவர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் பாமடசாலைக்கு வந்துசென்றதை காணமுடிந்தது.அத்துடன் வீதிகள் பல வெள்ள நீரில் மூழ்கியதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்கள் மத்தியில் போக்குவரத்தில் ஈடுபட்டதையும் காணமுடிந்தது.

மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பலரின் விடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதனால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.