திருப்பழுகாமத்தில் நடைபெற்ற பொங்கல் விழா

மட்டக்களப்பு திருப்பழுகாமம் இந்து கலா மன்றத்தின் 45வது ஆண்டு நிறைவு விழாவும், பொங்கல் விழாவும் இன்று பழுகாமம் திரௌபதையம்மன் ஆலய முன்றலில் தலைவர் அ.ஜீவரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பகுதியில் நீண்டகாலமாக இந்து அறப்பணியை மேற்கொண்டுவரும் திருப்பழுகாமம் இந்து கலா மன்றத்தின் 45வது ஆண்டு நிறைவு விழா வருடாந்தம் சிறப்பான அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டு பொங்கல் விழா நடைபெற்றதை தொடர்ந்துஇந்து கலா மன்றத்தின் 45வது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.

45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பஜனைபாடல் திரட்டு நூலொன்றும் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, கலை நிகழ்வுகள் என்பவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், மற்றும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன்,  முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.