இரத்தமாதிரி மாற்றி ஏற்றப்பட்டு சிறுவன் உயிரிழந்த விவகாரம் -நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்தம் மாதிரியை மாற்றி ஏற்றி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த வந்தாறுமூலையினை சேர்ந்த 09வயதான சிறுவன் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வந்தாறுமூலையை சேர்ந்த விதுலக்சன் கடந்த 19.03.2019 அன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்திருந்தார்.

இரத்தம் மாதிரியை மாற்றி வழங்கியதன் காரணமாகவே குறித்த இளைஞன் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பிலான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவந்தது.

இதனை தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில் கடந்த மாதம் குற்ற புலணாய்வு பிரிவிற்கு இது தொடர்பான உண்மை தன்மை அறிய வழக்கு பாரப்படுத்தபட்டிருந்தது.

அதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த வழக்கினை தைமாதம் 08ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.