தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில், மாவட்ட நிஸ்கோகூட்டுறவு சங்கத்தின் முகாமையாளராக கடமைபுரிந்த ப.கிருபைராசா அவர்கள் கடந்த புதன்கிழமை (06.03) முதல் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
நேற்று வெள்ளிக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் உதவிப்பணிப்பாளர் ஹாலித்தின் ஹமீர் முன்னிலையில் புதிய மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.