''பாடு மீன்களின் சமர்" என வர்ணிக்கப்படும் கிரிக்கட் சமர் இன்று

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  பிரபல  பாடசாலைகளான  வின்சன்ட்  உயர் தர பாடசாலை மற்றும் புனித சிசிலியா பெண்கள் கல்லூரிகளுக்கிடையில் சிநேக புர்வமாக ஒன்பதாவது தடவையாக நடாத்தப்பட்டுவரும் ''பாடு மீன்களின் சமர்" என வர்ணிக்கப்படும்  கிரிக்கட் சமர்  (09) சனிக்கிழமை வின்சன்ட்  உயர் தர பாடசாலை  அதிபர் திருமதி.சரண்யா சுபாகரன் தலைமையில்  பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட  மென்பந்து கிரிக்கட் சமரில், எட்டு  தடவைகளாக நடைபெற்ற    போட்டிகளில் 4 போட்டிகளில் புனித சிசிலியா பெண்கள் கல்லூரி அணியினரும் 4 போட்டிகளில் வின்சன்ட் உயர்தர பாடசாலை அணியினரும் வெற்றிபெற்றிருந்த நிலையில் ஒன்பதாவது தடவையாக இச் சமர் நாளை நடைபெறவுள்ளது.