ஆரையம்பதியில் மதுபானசாலையால் ஏற்படும் சீர் கேடுகள்.


ஆரையம்பதியில் கல்வி நிலையங்களின் அருகாமையில் அமைந்துள்ள ஓர்  மதுபான சாலையால் பொது மக்களும் மாணவர்களும் பெரும் அசோகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த  மதுபானசாலையில் குடித்துவிட்டு பிரத்தியேக வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை துன்பப்படுத்தும் சில விசமிகளால் மாணவ மாணவிகள் அதிக அசெளகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும்.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிசார், கலால் திணைக்கள உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தலைவர் ஆகியோர் கவனத்தில் கொண்டு தமக்கான தீர்வினைப் பெற்றுத்தருமாறும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.