கட்டிட நிர்மான ஒப்பந்தகாரர்களுக்கான தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு



(லியோன்)

தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு சென்று கட்டிட நிர்மான பணிகளில் ஈடுபட்டு நாடு திரும்பியவர்களுக்கு கட்டிட நிர்மான துறை தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு சீடா நிறுவனத்தின் ஊடாக கட்டிட நிர்மான  துறை ஒப்பந்தகாரர்களுக்கான தகமை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனை மியாணி நகர மண்டபத்தில் நடைபெற்றது


ஐ எல் ஒ நிறுவனத்தின்  நிதி அனுசரணையுடன்  மட்டக்களப்பு மாவட்ட செயலக மனித வலு வேலைவாய்ப்பு  திணைக்களம் இணைந்து ஏழுநாட்கள் நடாத்தப்பட்ட பயிற்சி  செயலமர்வில் தகமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட  18  பேருக்கு சீடா நிறுவனத்தினால் கட்டிட நிர்மான துறைக்கான அனுமதி தகமை புத்தகங்கள் வழங்கப்பட்டது .

தகமை சான்றிதழ்கள் மற்றும் கட்டிட நிர்மான துறைக்கான அனுமதி புத்தகங்கள்  வழங்கும் நிகழ்வில்  மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ் வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களும்  மற்றும் கட்டிட நிர்மான துறைக்கான  அனுமதிக்கான புத்தகங்களும் வழங்கி வைத்தார்

இந்நிகழ்வில் சீடா நிறுவன பணிப்பாளர் நளீம் குருஸ் , ஐ எல் ஒ . நிறுவன இணைப்பாளர் ருக்சான் லவள் , மட்டக்களப்பு மாவட்ட செயலக மனித வலு வேலைவாய்ப்பு  திணைக்கள உத்தியோகத்தர்கள் , மற்றும் கட்டிட நிர்மான துறை பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்