தன்னாமுனை ஹோலி இனொசன்ஸ் அக்கடமி பாலர் பாடசாலை சிறார்களின் கண்காட்சி


(லியோன்)
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று கல்வி கோட்டத்திற்குட்பட்ட  தன்னாமுனை மியானி நகர் ஹோலி இனொசன்ஸ்
 அக்கடமி பாலர் பாடசாலை சிறார்களின் வருடாந்த வருடாந்த  கண்காட்சி நிகழ்வு சொமஸ்கன் அருட்சகோதரிகளின் அனுசரணையுடன்  பாடசாலை அதிபர் அருட்சகோதரி .எஸ் . மேரி பற்றீசியா  தலைமையில் பாடசாலை இன்று நடைபெற்றது .


ஆரம்ப நிகழ்வாக சிறார்களினால்  அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றளுடன்  கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது .,இந்த கண்காட்சியானது முன்பள்ளி  சிறார்களின் செயல் ஆற்றல் திறன்களை  மேம்படுத்தும் வகையில் பாடசாலை ஆசிரியர்கள் ,பெற்றோர்களின் பங்களிப்புடன் இரண்டு நாள் கண்காட்சியாக நடாத்தப்படுகின்றது  .
இந்நிகழ்வில் பிரதம  அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளர்  எஸ் .சசிகரன் , ,விசேட அதிதிகளாக 

மட்டக்களப்பு கல்வி வலய  பாலர் பாடசாலை கல்வி பணியக வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி காவியா விஜயகுமார் , செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி . ஜெனோல்லா மாறி சந்திரஹாசன் மற்றும்  , சொமஸ்கன் அருட்சகோதரிகள் பாடசாலை ஆசிரியர்கள் , சிறார்களின் பெற்றோர் மற்றும் அயல் பாடசாலைகளின் மாணவர்கள்   , ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .