“ போதைப்பொருளற்ற எதிர்கால ஆரோக்கியாமான சமூகத்தை உருவாக்குவோம் “‘ போதைப் பொருள் எதிர்ப்பு கருத்தரங்கு


லியோன்


“ போதைப்பொருளற்ற எதிர்கால ஆரோக்கியாமான சமூகத்தை உருவாக்குவோம் “‘
எனும் தொனிப்பொருளில் போதைப் பொருள் பாவனை எதிர்ப்பு கருத்தரங்கு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம சேவை பிரிவுகளில் போதைப்பொருளற்ற ஆரோக்கியாமான சமூகத்தை உருவாக்குவோம்  செயல்திட்டத்தினை மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினால முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இதன்கீழ்  மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் ஒழுங்கமைப்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம் .தயாபரன் தலைமையில் போதைப் பொருள் பாவனை எதிர்ப்பு கருத்தரங்கு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று நடைபெற்றது

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச அமைப்புக்களின் அங்கத்தவர்களுக்கான நடைபெற்ற கருத்தரங்கில் பயிற்றுவிப்பு வளவாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி டி . தயாலீஸ்வர குமார் , மட்டக்களப்பு மதுவரி பரிசோதகர் பி . காண்டீபம் மற்றும் சமுர்த்தி தலைமையாக முகாமையாளர் திருமதி .செல்வி வாமதேவம்  ஆகியோர்  கலந்துகொண்டனர்