(லியோன்)
“பாடு மீன்களின் சமர் ” 2018 ஆம் ஆண்டுக்கான “பாடு மீன்களின் சமர் ” கிண்ணத்தை சுவிகரித்துகொண்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
பாடசாலையில் நடைபெற்றது
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள்
தேசிய கல்லூரிக்கும் , மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தர பெண்கள் தேசிய
பாடசாலைக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும்
“பாடு மீன்களின் சமர் ”என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் சமரின் 2018 ஆம் ஆண்டுக்கான கிரிகெட் சமர்
கடந்த 22 ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது
இந்த கிரிக்கெட் சமரில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை
வெற்றிபெற்று 2018 ஆம் ஆண்டுக்கான “பாடு மீன்களின் சமர் ” கிண்ணத்தை சுவிகரித்துகொண்டது
.
“பாடு மீன்களின் சமரில் வெற்றிப்பெற்று பாடாசாலைக்கு பெருமை சேர்த்த புனித
சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரி மாணவர்களை , அவர்களது பெற்றோர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர்
அருட்சகோதரி அருள்மரியா தலைமையில் கல்லூரியில் நடைபெற்றது
இந்நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் , பதக்கங்களும்
வழங்கி கௌரவிக்கப்பட்டனர் இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் ,
பெற்றோர்கள் கலந்துகொண்டனர்