ஈச்சந்தீவு கண்ணகி அம்பாளுக்கு இன்று பால்குடபவனி




(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு -ஈச்சந்தீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவச் சடங்குப் பெருவிழா -2018

ஆரம்பம் : 20.05.2018
நிறைவு  : 29.05.2018

20.05.2018 இன்று அம்பாளின் பால்குடபவனியானது நாவற்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி ஈச்சந்தீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தை வந்தடைந்ததும்  ஆலய பிரதம குரு : ஈசான சிவாச்சாரியார், ஆச்சாரிய கலா பூசனம் இரா.அருளானந்தம் குருக்களினால் அம்பாளுக்கு பாலாபிசேகம் இடம்பெற்றது.