முதன்முறையாக வழங்கப்பட்ட சாரணர்விருது



பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திக்கோடை கணேஷ வித்தியாலயத்தின் பெண்கள் சாரணியத்திற்கு அண்மையில் பெண்களுக்கான மாவட்ட சாரணர் ஆணையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். இப்பாடசாலையில் 2013ம் ஆண்டு சாரணர் இயக்கம் ஆரம்மித்துள்ளனர். இதன் பொறுப்பாசிரியர்களாக திருமதி ச.புட்கரன் மற்றும் செல்வி இந்துஜா கனகசூரியம் ஆகியோர் முன்னின்று செயற்பட்டனர்.  இவ்விருதினை  மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக இப்பாடசாலையே பெற்றுக்கொண்டுள்ளதாக மாவட்ட உதவி சாரணர் ஆணையாளர்(ஊடகம்) ஆ.புட்கரன் தெரிவித்துள்ளார்.