தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் திறந்து வைப்பு.










(சசி துறையூர்) தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சினுள்  வரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்க்கான மாவட்ட  காரியாலயம் (14.06.2017) புதன் கிழமை கல்லடியில் திறந்து வைப்பு.


யுனிசொப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் கல்லடி டச்பார் வீதியில் அமையப்பெற்ற புதிய காரியாலயம் இளைஞர் விவகார இராஜங்க அமைச்சர் கெளரவ நிரோசன் பெரேரா அவர்களினால் சுபநேரத்தில் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் காலீத்தின் ஹமீர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்  பிரதி அமைச்சர் எம்.எஸ்.எம் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன், சீ.யோகேஸ்வரன் , மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த திறப்புவிழா நிகழ்வில் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்,  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை அலுவல நிருவாக பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்    முன்னாள்  கிழக்கு மாகாண பணிப்பாளர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்   கிழக்கு மாகாண பணிப்பாளர், நிருவாக  உத்தியோகஸ்தர், திருகோணமலை மாவட்ட உதவிப்பணிப்பாளர் என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.