சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

(லியோன்)

காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள்  ஒன்றியத்தின் வருடாந்த  இப்தார் நிகழ்வு காத்தான்குடி அன்வர்  மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது .


மட்டக்களப்பு காத்தான்குடி லஜ லது சுன்னா அன்ன பேபியார் அமைப்பின் அனுசரணையில் சமூக மேம்பாட்டுக்கான மக்கள்  ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  வருடாந்த  இப்தார் நிகழ்வு (09) வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி அன்வர்  மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி லஜ லது சுன்னா அன்ன பேபியார் அமைப்பின் செயலாளரும், மஹத்து சுன்னா அன்ன பேபியார் மதுரசாவின் உப அதிபருமாகிய அசேக் எம் .எம் .மதினியின்   மார்க்க உரையுடன் நடைபெற்ற ரமழான் 15ஆம்  நாள் நோம்பு நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  எ டப்ளியு .இ .வெலகெதர மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் எ சி எ .அசிஸ், ,,உலமாக்கள்  உட்பட காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள்  ஒன்றியத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர் .