(லியோன்)
மட்டக்களப்பு புளியடிக்குடா
செபஸ்தியார் ஆலய சிறுவர்களுக்கான பூங்கா
கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது
.
இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக கிளை
மற்றும் மண்முனை வடக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அனுசரணையில் அமைக்கப்பட்ட
மட்டக்களப்பு புளியடிக்குடா செபஸ்தியார்
ஆலய சிறுவர்களுக்கான பூங்கா இன்று திறந்து வைக்கப்பட்டது .
இலங்கை மனித உரிமைகள் அமைப்பு மற்றும் மண்முனை வடக்கு தேசிய இளைஞர் சேவைகள்
மன்றம் பல சமூக பணிகளை முன்னெடுத்துவருகின்றது.
இதன் கீழ் செபஸ்தியார் ஆலய சிறுவர்களுக்காக 0.2 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு
சிறுவர் பூங்கா இன்று ஆலய பங்குதந்தையிடம் கையளிக்கப்பட்டது
இந்நிகழ்வில் புளியடிக்குடா செபஸ்தியார் ஆலய பங்குதந்தை அருட்பணி
லோரன்ஸ் , அருட்பணி .நவரட்ணம், மனித உரிமைகள் அமைப்பின் தேசிய நிர்வாக பணிப்பாளர்
டி .எம் . சந்திரபாலன் , மனித உரிமைகள் அமைப்பின் தேசிய திட்ட பணிப்பாளர்
அசோக்குமார் , மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஆர் . பாத் லெட்,
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உத்தியோகத்தர் திருமதி .கலாராணி .முன்னாள் இளைஞர்
பாராளுமன்ற உறுப்பினர் ஐ .பயஸ்ராஜ் ,,மனித உரிமைகள் அமைப்பின் மாவட்ட நிர்வாக
பணிப்பாளர் செல்வநாதன் , மட்டக்களப்பு
மாவட்ட மனித உரிமைகள் அமைப்பின் விசாரணை அதிகாரிகாரிகளான ஐ .எம் . தசிர் , கே ரஜனிகாந்த் , மறைக்கல்வி
மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்