(லியோன்)
உதயம் விழிப்புலனற்றோர்களுக்கான தொழில் பயிற்சி நிலையம் (09) மட்டக்களப்பில்
திறந்து வைக்கப்பட்டது .
விழிப்புலனற்றவர்களை வாழ்வில் ரீதியாக முன்னேற்றிச்
செல்வதற்கான தொழில் பயிற்சி நிலையம் உதயம்
விழிப்புலனற்றோர் சங்க தலைவர் எம் . ஜதீஸ்
தலைமையில் மண்முனை வடக்கு உதவி பிரதேச
செயலாளர் எஸ் .யோகராஜா , காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ டப்ளியு .இ .வெலகெதர , ஆரையம்பதி மாவட்ட
வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் எப் . அல்மேதா ஆகியோர் இணைந்து தொழில்
பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தனர் .
விழிப்புலனற்றவர்கள் எவரும் யாரிடமும் கையேந்தாது , விழி இழந்தவன்
தங்கி வாழக்கூடாது , தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் தாங்கி வாழ்கின்ற
தனிமனிதனாக வளர வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒரு தொழில் பேட்டை நிறுவ வேண்டும்
என்ற நோக்குடன் இந்த தொழில் பயிற்சி நிலையம் திறந்தி வைக்கப்பட்டுள்ளது .
இந்நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்
.அருள்மொழி , மண்முனை வடக்கு சமூக சேவை உத்தியோகத்தர் டி . ராஜ்மோகன் ,
காத்தான்குடி பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அதிகாரி ஜெயசீலன் ,உதயம் விழிப்புலனற்றோர்
சங்க ஆலோசகர் ராஜன் மயில்வாகனம் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் , பொருளாதார
அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர் ,உதயம் விழிப்புலனற்றோர்
சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்