(லியோன்)
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான
விழிப்புணர்வு செயலமர்வு இன்று
மட்டக்களப்பில் நடைபெற்றது
மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும்
பரிந்துரைத்தல் ,அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்தலுக்கான வழிகாட்டல்
செயல்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட
மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வு
செயலமர்வு கரித்தாஸ்
எகெட் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜிரோன் டி லிமா தலைமையில் மட்டக்களப்பு
கிறிஸ்தவ வாலிப சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இந்த செயலமர்வில் வளவாளராக
எஸ்கோ திட்ட இணைப்பாளர் எஸ் உதயேந்திரன் கலந்துகொண்டு பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான தெளிவூட்டல்களை
ஆசிரியர்களுக்கு வழங்கினார் .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் , கரித்தாஸ்
எகெட் நிறுவன வெளிக்கள
உத்தியோகத்தர்களான திருமதி எம் செல்வராணி
,எஸ் . மைக்கல் ஆகியோர் கலந்துகொண்டனர்