(லியோன்)
மட்டக்களப்பு புளியந்தீவு புனித
அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மட்டக்களப்பு புளியந்தீவு புனித அந்தோனியார்
திருத்தல வருடாந்த திருவிழா பங்குதந்தை
இன்னாசி ஜோசப் தலைமையில் கடந்த 04.06.2017
ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
.
திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை மறைவுரைகள் , பிராத்தனைகளுடன் திருப்பலிகளும்
நடைபெற்றதுடன் 12.06.2017 மாலை விசேட நற்கருணை வழிபாடு , மறைவுரைகளுடன்
தொடர்ந்து புனிதரின் திருவுருவ பவணியும் விசேட திருப்பலியும் ஒப்புகொடுக்கப்பட்டது .
திருவிழா திருப்பலியினை 13.06.2017 செவ்வாய்கிழமை காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி
பொன்னையா ஜோசப் தலைமையில் பங்குதந்தை இன்னாசி
ஜோசப் , மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை எ .தேவதாசன் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர்
திருத்தல திருவிழா திருப்பலியை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது