உள்ளக அலுவல்கள் கலாசார அமைச்சின் சித்திரை புதுவருட நிகழ்வுகள்

(லியோன்)


சித்திரை  புதுவருடத்தை  முன்னிட்டு  மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தினால் நடத்தப்பட்ட  சித்திரை  புதுவருட  கலை ,கலாசார விளையாட்டு நிகழ்வுகள்    மட்டக்களப்பில் நடைபெற்றது


உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தினால் நடத்தப்பட்ட   தமிழ் சிங்கள  சித்திரை புதுவருட  பாரம்பரிய கலை கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள்   மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி திருமதி எஸ் .எ . ரஞ்சிதகுமார்   தலைமையில்  மட்டக்களப்பு    இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது  

புதுவருட  கலை ,கலாச்சார விளையாட்டு  நிகழ்வில்  பாரம்பரிய  கலாசார விளையாட்டு   நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் , மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய  உறுப்பினர்கள் , இளைஞர் ,யுவதிகள்   என பலர் கலந்து  சித்திரை புதுவருட விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தனர் .


இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக   உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர்  பேர்னாட் வசந்த , மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா , பத்தாவது கஜபா ரெஜமேந்து மேஜர் மஞ்சுள  டீ சில்வா , கிராம சேவை உத்தியோகத்தர் வி .லவகுமார்  மற்றும்  விளையாட்டு   கழக உறுப்பினர்கள்   என  பலர் கலந்து சிறப்பித்தனர் .