கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா

(லியோன்)

மட்டக்களப்பு  கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு  விழா நிகழ்வு மகாஜன கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது 
 

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய  வருடாந்த பரிசளிப்பு விழா  வித்தியாலய  அதிபர் அருமைத்துரை  தலைமையில்  மட்டக்களப்பு மகாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .

நடைபெற்ற  வருடாந்த பரிசளிப்பு  விழா நிகழ்வில் மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு  பரிசில்களும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .

பரிசளிப்பு விழாவில்  பிரதம விருந்தினராக  வலயக் கல்விப்பணிப்பாளர்கள், கே .பாஸ்கரன் ,கோட்டக்கல்வி பணிப்பாளர் எ .சுகுமாரன் , வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் , அருட்தந்தையர்கள் ,பாடசாலை  ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , பாடசாலை  அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்