சகல திருச்சபைகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

(லியோன்)

மட்டக்களப்பு சகல திருச்சபைகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்ட   பாஸ்டர்ஸ்  யூனியனின் சகல திருச்சபைகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள உதிரம் கொடுத்து உயிர்காக்கும் உன்னத பணி  எனும் தொனிப்பொருளிலான  இரத்ததான முகாம் மாவட்ட  பாஸ்டர்ஸ்    யூனியன் தலைவர் கே .தேவேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு பாஸ்டர்ஸ்  யூனியன் காரியாலயத்தில் நடைபெற்றது   நடைபெற்றது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில்  இரத்த வங்கி வைத்திய பிரிவு அதிகாரிகளினால்  விடுக்கப்படுகின்ற  வேண்டுகோளுக்கு இணங்க திருச்சபைகளின் ஒன்றியம்  சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற  அடிப்படையில்  இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்ததான முகாம் இன்று காலை 08.30 மணி முதல் பிற்பகல் 12.00மணி வரை நடைபெற்றது .

இந்த இரத்த தான  நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் , வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள்மட்டக்களப்பு மாவட்ட   பாஸ்டர்ஸ்  யூனியன் திருச்சபைகளின்  உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்