(லியோன்)
மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி கொடியிறக்கத்துடன்
நிறைவுபெற்றது .
மட்டக்களப்பு
மறை மாவட்டத்தின் மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு இலங்கை ,பாகிஸ்தான் யேசுசபை மாகாண தலைவர்
அருட்தந்தை டெக்ஸ்டர் கிறே தலைமையில் ஆலய பங்கு தந்தை லோரன்ஸ் ,
அருட்தந்தை நவாஜி, அருட்தந்தை அன்ரனி பிரதாப்ராஜ் ,அருட்தந்தை றோசான் , அருட்தந்தை ஜோசெப் மேரி ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர் .
ஆலய
வருடாந்த திருவிழா கடந்த 05.05.2017 வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன்
ஆரம்பமானது.
தொடர்ந்து
நவநாட்காலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு திருசெபமாலை அருளுரைகளுடன் திருப்பலிகள் இடம்பெற்றது.
13.05.2017 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு ஆலயத்தில் விசேட திவ்வியநற்கருணை வழிபாடுகளும், மறைவுரைகளும் இடம்பெறவுள்ளதுடன்
புனிதரின் திருஉருவம் பவணி வழமையான வீதிகளினுடாக
எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .
இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு திருவிழா திருப்பலி இலங்கை ,பாகிஸ்தான்
யேசுசபை மாகாண தலைவர் அருட்தந்தை டெக்ஸ்டர் கிறே தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்டது .
திருப்பலியின் பின் ஆலய
கொடியிறக்கப்பட்டு வருடாந்த
திருவிழா
இனிதாக நிறைவு பெற்றது .
இந்த திருவிழா திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்து சிறப்பித்தனர் .