மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

(லியோன்)

உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் “  மாபெரும் இரத்ததான முகாம்  மட்டக்களப்பு நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின்  ஏற்பாட்டில் சம்மேளன தலைவர் எஸ் .திவ்விய நாதன் தலைமையில் உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் “ எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம்  மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையிலும், இளைஞர்கள் கழகங்கள் சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில்  இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்ததான முகாம் இன்று காலை 09.00மணி முதல் பிற்பகல் 01.00மணி வரை நடைபெற்றது .

இந்த இரத்த தான  நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஹாலீத்தின் ஹமீர் , மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி ஜே. கலாராணி, திருமதி நிஷாந்தி அருள்மொழி , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர்  நளின் கருணாசேன ,  .வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் , மாவட்ட  இளைஞர் சேவைகள்  கழக சம்மேளன உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்