(லியோன்)
மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய திருச்சுருப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது
.
புளியடிகுடா புனித
மார்ட்டின் டி போரஸ் சபையால்
முன்னெடுக்கப்படும் புனித செபஸ்தியார் திருச்சுருப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பங்குதந்தை
லோரன்ஸ் தலைமையில் ஆலய வளாகத்தில் நடைபெற்றது . .
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இலங்கை ,பாகிஸ்தான்
யேசுசபை மாகாண தலைவர் அருட்தந்தை டெக்ஸ்டர் கிறே ,அருட்தந்தை போல்சற்குண
நாயகம் , அருட்தந்தை றோசான் , அருட்தந்தை அன்ரனி பிரதாப்ராஜ் அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.