புனித செபஸ்தியார் திருச்சுருப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு  புளியடிக்குடா  புனித  செபஸ்தியார் ஆலய  திருச்சுருப  பீடத்திற்கான அடிக்கல் நாட்டும்  நிகழ்வு  இன்று  நடைபெற்றது .


புளியடிகுடா புனித மார்ட்டின்  டி போரஸ் சபையால் முன்னெடுக்கப்படும் புனித செபஸ்தியார் திருச்சுருப  பீடத்திற்கான அடிக்கல்  நாட்டும்  நிகழ்வு   பங்குதந்தை  லோரன்ஸ்    தலைமையில்  ஆலய வளாகத்தில்     நடைபெற்றது . .


இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில்  இலங்கை ,பாகிஸ்தான் யேசுசபை மாகாண தலைவர் அருட்தந்தை டெக்ஸ்டர் கிறே    ,அருட்தந்தை  போல்சற்குண நாயகம் ,  அருட்தந்தை றோசான் ,  அருட்தந்தை அன்ரனி  பிரதாப்ராஜ்  அருட்சகோதரிகள் மற்றும்  பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.