போராட்டத்திலும் சமூகசேவையில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டத்தின்போது பல்வேறு சமூகப்பணிகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

இதன்கீழ் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பின் சுற்றுலா மையமாக கருதப்படும் கல்லடி கடற்கரை பகுதியில் சிரமதான நடவடிக்கையொன்றினையும் மேற்கொண்டனர்.

தமது தொழில் உரிமைக்காக போராடிவரும் வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் சார்ந்தும் சிந்திக்கவேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்ததாக பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.

தொழில் உரிமை போராட்டத்தின் 76வது நாளான நேற்று இந்த கடற்கரை சிரமதான நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.