மட்டக்களப்பு நகரில் பாரிய விபத்து – மயிரிழையில் உயிர்தப்பிய மூவர்

மட்டக்களப்பு –திருமலை வீதியில் இன்று இரவு இடம்பெற்ற பாரிய விபத்தில் மூவர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் தாண்டவன்வெளியில் கன்டயினர் ஒன்று கார் ஒன்றை மோதியுள்ளதுடன் காரில் பயணித்தவர்கள் மயிரிழையில் தப்பியுள்ளனர்.
பிரதான வீதியால் வந்த கார் குறுக்கு வீதியொன்றில் திரும்பும்போது பின்னால் வந்த கன்டயினர் மோதியுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.